இலங்கையில் மேலும் 160 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று
நாட்டில் ஒமிக்ரோன் மாறுபாடு உறுதியான மேலும் 160 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். முன்னதாக இலங்கையில் சுமார் 45 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் மொத்த ஒமிக்ரோன் தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 205 ஆக அதிகரித்துள்ளது. ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அனுப்பட்ட 182 மாதிரிகளில் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்தார். இது தொடர்பான அறிக்கை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed